காலநிலை மாற்றத்திற்கான தீர்வின் ஒரு பகுதியாக செங்கல் இருக்க முடியுமா? முடியும் என்கிறார் மைக்கேல் இவான்ஸ். இவர் கேம்பிரிட்ஜ் கார்பன் கைப்பற்றுதல் மையத்தின் முதன்மை அதிகாரி ஆவார். தொடுவதற்கு கடினமாக இருந்தாலும் இந்த செங்கல் படிகங்களால் ஆனது. வியக்கத்தக்க வகையில் இலகுவாகவும் ஒரு நுரைப் பஞ்சின் அளவே எடை கொண்டதாகவும் இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இது காற்றிலிருந்து பசுமைக் குடில் வாயுவான கார்பன் டை ஆக்ஸைடை எடுத்து தயாரிக்கப்படுகிறது. கார்பன் டை ஆக்ஸைடை உலோகத்தாதுவாக்கி குறைந்த அடர்த்தியில் கைப்பற்றுவது மட்டுமல்ல அதை கெட்டியான பாறையாகவும் ஆக்குகிறோம் என்கிறார் இவான்ஸ். தொழிற்புரட்சிக்கு முந்திய காலத்தில் காற்று மண்டலத்தில் 280ppm கார்பன் டை ஆக்ஸைடு இருந்தது. தற்போது அது 421ppm ஆக உயர்ந்துவிட்டது. கணிசமான அளவு கார்பன் உமிழ்வு குறைக்கப்படாவிட்டால் 2060க்குள் அது 550ppm ஆக உயரும். இதனால் சராசரி வெப்பம் தொழில்மய காலத்திற்கு முன்பு இருந்ததை விட 2-.6டிகிரி செல்ஸியஸ் உயர்ந்து மிகப் பாதகமான விளைவுகள் ஏற்படும். இதற்கு ஒரு தீர்வு காற்று மண்டலத்திலிருந்து CO2 வை கைப்பற்றி அதை சேமிப்பது. இது நேரடி காற்று கைப்பற்றல் எனப்படும் (DAC). இந்த வழியில் துரிதமாக கைப்பற்றும் அளவுகளை அதிகரித்தால், 2100க்குள் காற்று மண்டலத்திலிருந்து 310 பில்லியன் டன் CO2ஐ நீக்க முடியும் என்கிறார்கள் நிபுணர்கள். கேம்பிரிட்ஜ் கார்பன் கைப்பற்றும் மய்யம் 2011இல் தொடங்கப்பட்டது. DAC தொழில் நுணுக்கத்தை மேம்படுத்தும் பல நிறுவனங்களில் அதுவும் ஒன்று. எங்களது தொழில் நுணுக்கத்தில் குறைந்த மதிப்புடைய தாது உப்புக்களைக் கொண்டு அதிக மதிப்புடைய பொருட்களை உருவாக்குகிறோம் என்கிறார் இவான்ஸ். இந்த தொழில் நுட்பத்தை மேம்படுத்த பிரிட்டிஷ் அரசாங்கம் அதற்கு 3 மில்லியன் ஈரோக்கள் அளித்துள்ளது.